படத்திற்கு போவதற்குமுன் ட்ரெய்லர் பார்த்தேன், ட்ரெய்லரில் வழக்கம்போல ஹீரோ கதையை, நேரேட் செய்வதுபோல இருந்தது. போச்சுடா மறுபடியும் ஒரே ஸ்டைலில் அடுத்தபடத்தையும் செய்கிறாரே என்று அலுப்பாய் இருந்தது. ஆனால்.....
விண்ணைதாண்டி வருவாயா படம் பார்த்தாகிவிட்டது, படம் பற்றி நிறைய கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தமான மெலோ டிராமா வகையை சேர்ந்த படம். ரொம்பவே பிடித்துப்போனது. சிம்பு சான்ஸே இல்லைப்பா, கலக்கிட்டாரு மனுஷன். நல்ல மெச்சூரிட்டி, ஹேண்ட்சம்மாவும் இருக்கார். அடுத்தபடம் மணிரத்னம் படமாமே? ஜாமாய்ங்க, சிம்பு.
எனக்கு இந்த படம் பிடித்துப்போக இரண்டு அதிமுக்கிய காரணம், ஒன்று ரகுமான் இன்னொன்று மனோஜ் பரமஹம்சா. ரெண்டு பேரும் இந்த பட்த்துக்கு அவ்ளோ மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் ரகுமான் ஏரோமலே பாடலின் கிடார் இசையை மெல்ல வாசிக்க, கதாநாயகன் கார்த்திக்கின் பார்வையில் படம் விரிகிறது. ஒவ்வொரு ஷாட்டாக படம் தொடர தொடர இசை மெல்ல மனதிற்குள் வியாபிக்கிறது. ரகுமானுக்கு ஏன் ஆஸ்கார் குடுத்தாங்கன்னு புரியலைங்கிறவங்க இந்த படத்தை ஒருமுறை பாருங்கள். கேளுங்கள். படம் ஆரம்பித்த முதல் 30 நிமிடத்திலேயே முடிவு செய்துவிட்டேன், மறுபடியும் பார்க்கனும் என்று.
தொலைதூரத்தில் வெளிச்சம் நீ ..
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே!
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
*****************************
வண்ணவண்ண பட்டுபூச்சி
பூத்தேடி பூத்தேடி அங்குமிங்கும் அலைகின்றதே
சொட்டுசொட்டாய் தொட்டுசெல்ல
மேகமொன்று மேகமொன்று எங்கெங்கோ அலைகின்றதே
பட்டுபூச்சி வந்தாச்சா?
மேகமுன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறாய், நான் குழந்தையாகிறேன்.
கிளிஞ்சலாகிறாய், நான் குழந்தையாகிறேன்.
உன்னை அள்ளி கையில்வைத்து பொத்திக்கொள்கிறேன்
என்மீது அன்பு கொள்ள, என்னோடு சேர்ந்து செல்ல
ம் என்று சொல்லு போதும்.
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுஇதயம் தருவேன் நீ உடைக்கவே
(ரொம்ப நாளா பரிசல் கேட்டுகிட்டே இருந்தார், மறு இதயம்ன்னு ஏன் சொல்றாங்கன்னு, ஹீரோயின் ஜெஸி, ஒரு கிருத்துவ பெண் என்றதும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்ற பைபிளின் வாசகத்தைக் கொண்டு இவரிகளை அமைக்க ரகுமானே உதவியதாக கெளதம் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்)
(விஜய் பிரகாஷ், பாடிய பாடல், முதலில் ரகுமான் தான் பாடியிருப்பரென நினைத்தேன், ஓம் சிவ ஓம் என்ற நான் கடவுள் பட பாடலை பாடியவர். என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன், நம்பவே முடியலை)
******************************************
ஏரோமலே பாடல்வரிகளின் அர்த்தம் புரியவில்லை, ஆனால் இசையே ஒரு மொழியாகிற பொழுது அது அவ்வளவு முக்கியமாய் படவில்லை. மனுஷன் என்னமா ஃபீல் பண்ணி பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்பவர்கள், ஆரம்பத்தில் வரும் கிடாரையும் பாடலின் கடைசி 20 வினாடிகளையும் தவறவிடாமல் கேளுங்கள்.
******************************************
படத்தோட முதல் ப்ரேமிலேயே ராஜீவ் மேன்னுக்கு நன்றி சொல்கிறார்கள், விண்ணைதாண்டி வருவாயா என்ற கவித்துவமான தலைப்பிற்கு. முதல் ஷாட்டில் சிம்புவின் வசனம்
காதலை தேடிப்போக முடியாது, அது நினைக்கனும், அதுவா நடக்கனும்,
நம்ம போட்டு தாக்கனும், தலைகீழா போட்டு திருப்பனும்
எப்போதும் கூடவே இருக்கனும், அதான் ட்ரூ லவ்.
எனக்கு அது நடந்தது,
சோ, ஆக்ட்சுவலா நான் ஜெசிய ச்சூஸ் பண்ணேன்
என்னை அடிச்சது அந்த காதல்....
உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க
நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்?
படம் முழுக்க இதை கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவர்களாய் அதை சொல்லவில்லை. ஆனாலும் புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவா கெளதமின் வசனங்கள் ரொம்பவே செயற்கையாக இருப்பதாய் தோன்றும். அவசியமாக திணிக்கப்பட்டதுபோல இருக்கும் அவரது வசனங்கள். விண்ணைதாண்டி வருவாயா படத்தில் வசனங்கள், அத்தனை பொருத்தம் படத்திற்கு. வாழ்த்துக்கள் கெளதம்.
*******************************************
இரண்டு நாட்களுக்குமுன்பு என் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் என்ற பதிவெழுதியிருந்தேன். முதல்காதலை நியாபகப்படுத்திய அந்த ஓரிரு தினங்களிலேயே இப்படி ஒரு படத்தைப் பார்க்கிறேன். என் வாழ்கையோடு ரொம்பவே ஒத்துபோகக்கூடிய காட்சி அமைப்புகள். ஒவ்வொரு காட்சியிலும் என்னை சம்பந்தப்படுத்தியே பார்த்துக்கொண்டிருந்தேன். சத்தியமா இது எனக்கு மட்டும் இல்லை. வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிமிடத்தில் காதலித்தவர்களுக்கும், காதலிக்கப்பட்டவர்களுக்கும் இப்படி ஒரு உணர்வு தோன்றுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.முதல் பாதி ஓக்கே, இரண்டாவது பாதி ஸ்லோ, ஒரு தொய்வு இருக்கு என்பவர்கள். அந்த தொய்வின் பாதிப்பை படம் முடிந்து சில மணி நேரங்களியே உணரக்கூடும். நிச்சயம் இந்த படத்தை ஸ்லோவாகத்தான் செய்ய வேண்டும். பொதுவாகவே கெளதமின் கதை மாந்தர்கள் இண்டெக்ட்சுவலாக இருப்பர்கள். அவர்களின் பார்வையில் எதுவுமே புதிதாக இருக்கும். அது மறுபடியும் நடந்திருக்கிறது, இந்த திரைப்படத்தில்.
********************************************
கெளதம் மேனன், இந்த மனுஷனுக்கு மட்டும் பாட்டெல்லாம் எப்படி அமையுதுன்னு தெரியலைங்க, இவருடைய எல்லா படங்களும் மியூசிகல் ஹிட். BEFORE SUNRISE, SUNSET மாதிரியான படங்கள் தமிழில் வருமா? வந்தாலும் வெற்றிபெருமா? என்றிருந்த சந்தேகம் இந்த படத்திற்கு பிறகு குறைந்துவிட்டது.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)











